செப்டம்பர் 18, 2011

காராமணி (அ) தட்டபயிறு சுண்டல்

தேவையான பொருட்கள் :


காராமணி (அ) தட்டபயிறு - 150g (3 Mem)
சிறிய வெங்காயம்  - 100g
கறிவேப்பிலை, கடுகு, கடலை பருப்பு ,சோம்பு - தாளிக்க
வர மிளகாய் - 5
எண்ணெய்- தாளிக்க
உப்பு  -  தேவைக்கு
மிளகாய் தூள் - தேவைக்கு
 மஞ்சள் - தேவைக்கு

செய்முறை :
* காராமணி (அ) தட்டபயிறு 3 மணி நேரம் ஊற வைத்து பின் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பருப்பு உடையும் வரை வேக வைத்து நீரை வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.


* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு ,சோம்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், நறுக்கிய சிறிய வெங்காயம், ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக தாளிக்கவும்.


* பின் அதில் காராமணி (அ) தட்டபயிறு ஐ சேர்த்து நன்றாக தாளித்து தேவையெனில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக தாளித்து மல்லி இழையை தூவி இறக்கவும்.


காராமணி (அ) தட்டபயிறு சுண்டல் தயார்.


செப்டம்பர் 14, 2011

சென்னா மசாலா

இங்க நான் MTR சென்னா மசாலா பாக்கெட்ல இருக்குற குறிப்ப அப்டியே கொடுத்திருக்கேன். அதே சமயம் நானும் இத செஞ்சு சாப்டு பாத்தேன். டேஸ்ட்டா இருக்கு.


தேவையான பொருட்கள்:
வெள்ளை சென்னா - 130g
உருளை கிழங்கு - 250g
தக்காளி - 3
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
மஞ்சள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவுகொத்தமல்லி இழை- சிறிது
MTR சென்னா மசாலா - 2 டீஸ்பூன்

குறிப்பு: MTR சென்னா மசாலா இலையெனில் சோம்பு,தனியாத் தூள்,சீரகத்தூள்,சிவப்பு மிளகாய்த்தூள் இவற்றை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


செய்முறை :

                 * வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

                  * ஒரு தக்காளி மற்றும் உருளை கிழங்கு சேர்த்து வேக வைத்து மசித்து கொள்ளவும்.

                  *எண்ணெயை சூடு செய்து அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உருளை கிழங்கு, தக்காளி கூழ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

                  *பின் MTR மசாலா, உப்பு, நீர், சேர்த்து  கிரேவி  பதமாக வேகவிட்டு மல்லி இழை தூவி இறக்கவும்.

                  *சுவையான, சத்தான சென்னா மசாலா தயார்.

சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள இது நன்றாக இருக்கும்.

செப்டம்பர் 09, 2011

உருளை கிழங்கு இட்லி குழம்பு

தேவையான பொருட்கள் :




உருளை கிழங்கு           - 2
வெங்காயம்                   - 1
தேங்காய் பால்              - 1 கப்
சாம்பார் தூள்                 - 2  மேஜைகரண்டி
கரம் மசாலா                  - 1  மேஜைகரண்டி
உப்பு                                  -    தேவையான அளவு






செய்முறை:


* உருளைகிழங்கு வேகவைத்து எடுத்து சிறு துண்டுகளாக போட்டு கொள்ளவும்.


* வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி
தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.


* பிறகு சாம்பார் தூள், கரம் மசாலா தூள், வேகவைத்த உருளை கிழங்கு சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து  எண்ணெய் பிரிந்து திக்காக வந்தவுடன் இறக்கவும் 

  உருளை கிழங்கு இட்லி குழம்பு  இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.