தேவையானவை :
- துவரம் பருப்பு - 1 கப்
- தேங்காய் - 1/2 கப் அரைத்தது
- கொத்தமல்லி - 1 1/2 தேக்கரண்டி
- வத்தல் - 4
- கடுகு - 1 தேக்கரண்டி
- நச்சீரகம் - 1 தேக்கரண்டி
- புளிகரைசல் - 1 1/2 கப்
- முருங்கைகாய் - 4
- பெருங்காயம் - சிறிது
- கொத்தமல்லி இலை - சிறிது
- மஞ்சள்தூள் - சிறிது
- எண்ணெய் - தாளிக்க
- கருவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வத்தல்,கொத்தமல்லி, நச்சீரகம் இவற்றை எண்ணெய்யில் வதக்கி ,பாதி தேங்காய் விழுதையும் சேர்த்து அரைக்கவும்.
- முருங்கைகாயை வெட்டி உப்பு,மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- துவரம் பருப்பை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
- காய்கறி வெந்ததும் அதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு அனைத்தயும் சேர்த்து புளிகரைசலையும் ஊற்றி வேகவிடவும்.
- பின் ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, போட்டு வெடித்ததும் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
- பின் மீதி உள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும்.
- முருங்கைகாய் சாம்பார் ரெடி.